search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் செந்தில் பாலாஜி
    X
    அமைச்சர் செந்தில் பாலாஜி

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான 4 வழக்குகள் ரத்து

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான 4 வழக்குகளை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.
    சென்னை:

    மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், தி.மு.க.வினர் மீது போலீசார் பொய் வழக்கு போடுவதாகவும் குற்றம்சாட்டி கடந்த 2020-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்துக்கு தற்போது மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார். இதையடுத்து, செந்தில்பாலாஜி உள்பட பலர் மீது 4 வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர்.

    இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில், செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, மனுதாரர் மீதான 4 வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.
    Next Story
    ×