என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
வீட்டின் பூட்டு உடைத்து 10 பவுன் நகைகள் கொள்ளை
ஓசூரில் வீட்டின் பூட்டு உடைத்து 10 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின் றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கே.சி.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ். இவரது மனைவி கவிதா (வயது40).
இந்த நிலையில் இவர் கடந்த 7&ந்தேதி அன்று வீட்டை பூட்டி விட்டு கடைக்கு சென்று விட்டார். பின்னர் வந்து பார்க்கும் போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தார்.
அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் தங்க நகை திருடு போனது தெரியவந்தது. மர்ம நபர்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதை நோட்டமிட்டு திட்டம் போட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து அவர் ஓசூர் அட்கோ போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை வருகின்றனர்
Next Story






