என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
கிருஷ்ணகிரி டேம் அருகே மாரியம்மன் கோவில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு
கிருஷ்ணகிரி டேம் அருகே மாரியம்மன் கோவில் உண்டியல் உடைத்து பணம் திருடிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே சாப்பரம் அடுத்துள்ள கருத்தமாரம்பட்டி பகுதியில் மாரியம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலில் அறங்காவலராக அபிமன்னன் (வயது44) இருந்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 8&ந்தேதி அன்று வழக்கம் போல் பூஜையை பூசாரி செய்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் வந்து பார்க்கும் போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை கண்டு அறங்காவலர் அதிர்ச்சி அடைந்தார். மர்ம நபர்கள் இரவு கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து கிருஷ்ணகிரி டேம் போலீசில் அறங்காவலர் அபிமன்னன் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளை யர்களை தேடி வருகின்றனர்.
Next Story






