என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் திடீர் மாயம்

    மத்தூர் அருகே திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் திடீர் என மாயமானார்.
    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் செட்டியப்பன் நகர் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது மகள் ரேஸ்மா (வயது19). இவருக்கும் ஊத்தங்கரையை சேர்ந்த சையது உசேன் என்ப வருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கணவன்& மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று மீண்டும் இவர்களுக்கு தகராறு நடந்தது. இதனால் கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு ரேஸ்மா சென்று விட்டார்.

    கடந்த 6&ந்தேதி அன்று தனது  தாயிடம் ரேஸ்மா கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து சகிரா மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான ரேஸ்மாவை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×