என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
இரும்பு சீட்டை திருடிய வாலிபர்கள் 2 பேர் கைது
ஊத்தங்கரை அருகே இரும்பு சீட்டை திருடிய வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே திருப்பத்தூர்& சேலம் செல்லும் சாலை 4 வழி சாலையாக மாற்றப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
இந்த பணியின் போது பாலம் கட்டுவதற்கு வைத்திருந்த இரும்பு சீட்டை மர்ம நபர்கள் 2 பேர் நேற்று திருடி கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனை அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் திருடர்களை சுற்றி வளைத்து பிடித்து ஊத்தங்கரை போலீசில் ஒப்படைத்தனர்.
அங்கு போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் கொண்டம்பட்டியை சேர்ந்த சீனிவாசன் மகன் விஜய் (வயது19), திப்பம்பட்டியை சேர்ந்த முருகன் மகன் அருள் (18) ஆகியோர் என தெரியவந்தது. உடனே அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத் தனர்.
Next Story






