என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பால் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    பால் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

    குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு விழாவை முன்னிட்டு பால் கம்பம் நடப்பட்டது

    குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு விழாவை முன்னிட்டு பால் கம்பம் நடப்பட்டது.
    குடியாத்தம்:

     வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கை யம்மன் கோவில் சிரசு திருவிழாவை முன்னிட்டு கோவிலில் பால் கம்பம் நடும் விழா இன்று காலை நடைபெற்றது.

    நிகழ்ச்சியை யொட்டி மூலவருக்கு சிறப்பு அலங்காரமும், சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து பால் கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்து பால் கம்பம் நடப்பட்டது. பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பால் ஊற்றினர்.

    இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் நகர மன்றத் தலைவர் எஸ் சவுந் தரராஜன், துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள் தேவகி கார்த்திகேயன், ஆட்டோ மோகன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, ஊர் நாட்டாமை ஆர்.ஜி.சம்பத், தர்மகத்தா கே. பிச்சாண்டி, திருப்பணி குழு தலைவர் ஆர்.ஜி.எஸ்.கார்த்திகேயன் உள்பட முன்னாள் அறங்காவலர்கள், ஆலய திருப்பணி கமிட்டியினர், கோபாலபுரம் பொது மக்கள், விழாக்கு ழுவினர், இளைஞர் அணியினர் செய் திருந்தனர்.

    கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா--வின் முக்கிய நிகழ்வாக வருகிற 30&ந் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், மே மாதம் 14&ந் தேதி தேர் திருவிழாவும், 15-ந் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழாவும் நடை-பெறுகிறது.
    Next Story
    ×