என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிறிஸ்தவர்கள் ஆர்பாட்டம் நடத்திய காட்சி
    X
    கிறிஸ்தவர்கள் ஆர்பாட்டம் நடத்திய காட்சி

    கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்

    கிறிஸ்தவர்கள்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    புதுச்சேரி:

    தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கம் சார்பில் பேராயர் இல்லம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலதலைவர் மேரிஜான் தலைமை வகித்தார். 

    ஆரோக்கியதாஸ், ராபர்ட்-பெஞ்சமின், அற்புதராஜ், தானியேல், விண்ணொளி-இர்வின்பால், சந்தனதுரை, எமிலி, சலேத்தையன், தலித்ராஜ், பெர்ணாண்டஸ், அழகு-சுந்தரம், அமலோற்பவதாஸ், ஆலீஸ், ஆனந்தராஜ், சூசை, அற்புதராஜ், ரெஜினாமேரி கண்டன உரையாற்றினர்.

     பல்வேறு இயக்கத்தை சேர்ந்த ஜான்பிரிட்டோ, இருதயம் வல்லரசு, ஆரோஸ்டீபன்ராஜ், செல்வராஜ் உட்பட பலர் கலந்துகொண்டு பேசினர். 
    கத்தோலிக்க திருச்சபையில் சாதி ஆதிக்கம் உள்ளது. தலித் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளதால் தலித் பேராயரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
    Next Story
    ×