என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    X
    அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    ஈரோடு மாநகராட்சியில் தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்

    ஈரோடு மாநகராட்சி கூட்டம் இன்று நடந்தது. இதில் சொத்து வரி உயர்வு குறித்து தி.மு.க&அ.தி.மு-.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது-.
    ஈரோடு:


    ஈரோடு மாநகராட்சி கூட்டம் இன்று நடந்தது. இதில் சொத்து வரி உயர்வு குறித்து  தி.மு.க-அ.தி.மு-.க.வினர் இடையே  வாக்குவாதம் ஏற்பட்டது-. 

    ஈரோடு மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று தமிழக அரசின் சொத்து வரி சீராய்வு குறித்த அவசர  கூட்டம் மேயர் நாகரத்தினம் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் செல்வராஜ், ஆணையாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் அ.தி.மு.க. கவுன்-சிலர்கள் சூரம்பட்டி ஜெகதீஷ்¢, தங்கவேல், தங்கமுத்து, நிர்மலா தேவி, ஹேமலதா, பாரதி ஆகிய 6 கவுன்சிலர்கள் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்  ஆண் கவுன்சிலர்கள் கறுப்பு சட்டையும், பெண் கவுன்சிலர்கள் கறுப்பு சேலையும் அணிந்து இருந்தனர். 
    கூட்டம் தொடங்கியதும் சொத்து வரி உயர்வு குறித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கண்டனம் தெரிவித்து பேசிக்-கொண்டிருந்தனர். அப்போது தி.மு.க கவுன்-சிலர்கள் முதன் முதலில் சொத்து வரியை உயர்த்தியது அ.தி.மு.க. அரசு தான் என்று பேசி னா ர்கள். 
    இதற்கு அ.தி.மு.க. உறுப்பி-னர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சொத்து வரி உயர்வுக்கு தி.மு.க. அரசுதான் காரணம் என்று கூறினார். இதனால் அ.தி.மு.க. - தி.மு.க. கவுன்-சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது.  பின்னர் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேரும் சொத்து வரி உயர்வை கண்டித்து கோஷம் எழுப்பி-யவாறு மேயர் நாகரத்-தினத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
    அதனை தொடர்ந்து நிருபர்-களிடம் பேசிய அ.தி.மு.க. கவுன்சிலர்கள், 24 வருடத்திற்கு ஒரு முறை சொத்து வரி உயர்த்த வேண்டும் என்று இருந்த நிலையில் தற்போது 12 வருடத்திலேயே சொத்து வரி உயர்வு என்பது மக்களை ஏமாற்றும் செயல் என்றனர்.
    இதைத்தொடர்ந்து  கூட்டம் நடைபெற்றது. அப்போது தி.மு.க. உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களது வார்டில் உள்ள குறைகள் குறித்து பேசினர். அப்போது பெரும்பாலானோர் தங்கள் வார்டில் ஏதாவது பிரச்சனை என்றால் அது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொலை  பேசியில் தொடர்பு கொண்டால் அவர்கள் போனை எடுப்பதில்லை என்று குற்றம் சாட்டினர். 
    தூய்மைப் பணியாளர்கள் பற்றாக்குறையால் பல்வேறு இடங்களில் தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினர். இதேபோல் பல்வேறு இடங்களில் ரோடு மோசமாக உள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.
    இதற்கு பதிலளித்து மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் கூறும்போது,
    உறுப்பினர்கள் தெரிவித்துள்ள கருத்து குறித்து ஆலோசிக்கப்பட்டு அவர்கள் குறைகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். தூய்மைப் பணியாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். அரசு அறிவித்துள்ளபடி சொத்து வரி வசூலிக்கப்படும். 
    ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரி ஏ, பி, சி, டி எனப் பிரிக்கப்பட்டுள்ளது.   இதில் ஏ பகுதியில் சதுரடி ஒன்றுக்கு 2.60 ரூபாயும், பி பகுதியில் சதுரடி ஒன்றுக்கு 2.10 ரூபாயும், சி பகுதியில் சதுரடி ஒன்றுக்கு 1.60 ரூபாயும், டி பகுதியில் சதுரடி ஒன்றுக்கு 1.10 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. விடுபட்டுள்ள ஊராட்சி-கோட்டை குடிநீர், பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்கு நிதி உதவி கோரப்பட்டுள்ளது. நிதி வந்ததும் அந்தப் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் என்றார்.
    முன்னதாக கூட்டம் தொடங்கியதும் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழி மேயர் நாகரத்தினம் தலைமையில் கவுன்சிலர்கள் ஏற்றுக் கொண்டனர்.
    Next Story
    ×