என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது
புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:
புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு வீரப்பன்சத்திரம் சப்- இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் . அப்போது பெரிய சேமூர், தண்ணீர் பந்தல் பாளையம், மாரியம்மன் கோவில் அருகே சந்தேகப் படும்படியாக ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
அவரை பிடித்து போலீசார் விசாரித்ததில் அவர் பெரியசேமூர் பகுதியை சேர்ந்த சேகர் (50) என்பதும், தடைசெய்யப்பட்ட ஆன்ஸ், புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது.
அவரிடமிருந்து 2 கிலோ மதிப்புள்ள குட்கா, பான்மசாலா, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சேகரை கைது செய்தனர்.
Next Story






