என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வட மாநில வாலிபரிடம் செல்போன் பறித்து கைதான 2 பேர் சிறையில் அடைப்பு

    பெருந்துறை அருகே வட மாநில வாலிபரிடம் செல்போன் பறித்து 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
    பெருந்துறை:

    பெருந்துறை அருகே வட மாநில வாலிபரிடம் செல்போன் பறித்து 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    உத்தரபிரதேச மாநிலம், ரைப்பூர் பகுதியை சேர்ந்தவர் சோட்கோ (26). இவர் பெருந் துறை புதிய பஸ் நிலையம் அருகே தங்கி வசித்து வருகிறார். இவர் பெருந்து¬  செட்டி தோப்பு அருகே தள்ளு வண்டியில் ஜூஸ் போடும் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று கடையில் ஜூஸ் போட்டுக் கொண்டி ருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஜூஸ் குடித்தனர். தொடர்ந்து அவர்கள் சோட் கோ மணியிடம் இருந்து திடீரென செல்போனை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில்  தப்பி ஓடினர். 
    இதனால் அதிர்ச்சி அடைந்த சோட்கோமணி திருடன்.. திருடன் என்று சத்தம் போட்டு கொண்டு அவர் களை துரத்தினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர் களும் அவர்களை துரத்தினர். இதனால் வெங்கமேடு வளைவு பகுதியில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

    இதையடுத்து பொது மக்கள் அவர்களை பிடித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் 15 வயது மாணவன் மற்றும் 18 வயது வாலிபர் என தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.
    இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார். தொடர்ந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
    Next Story
    ×