என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தபோது எடுத்த படம்.
கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி
கொளாநல்லி கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் 112-வது ஆண்டாக திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கொடுமுடி
கொளாநல்லி கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் 112-வது ஆண்டாக திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கொடுமுடி அருகே கொளாநல்லியில் ஸ்ரீ பூமி நீளா சமேத கல்யாண வரதராஜப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 112&ம் ஆண்டாக சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனையொட்டி காலை 7.30 மணிக்கு சுவாமிக்கு அபிசேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பரத நாட்டிய நிகழ்ச்சியுடன் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து யாக பூஜை, ஊஞ்சலில் சுவாமி எழுந்தருளல், மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், மாங்கல்ய பூஜையும் தொடர்ந்து மாங்கல்ய தாரணம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி தேங்காய் உருட்டி விளையாடுதலும், மகா தீபாராதணையும், திருமண விருந்து நிகழ்ச்சியும் நடைபெற்றது.
சுவாமிக்கு திருமண வைபவத்தை ஸ்ரீவில்லிப்-புத்தூர் ஆண்டாள் கோவில் ஸ்ரீ சடகோப இராமனுஜர் ஜீயர் சுவாமிகள் நடத்தி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருமண நிகழ்ச்சியை கண்டு வணங்கி சென்றனர்.
Next Story






