என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஆந்திராவிலிருந்து பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது

    ஆந்திராவிலிருந்து பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டனர்.
    குடியாத்தம்:

    ஆந்திர மாநிலத்தில் இருந்து குடியாத்தம் சைனகுண்டா செக்போஸ்ட் வழியாக கஞ்சா கடத்தல் நடைபெறுவதாக வந்த புகார்களின் பேரில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தீவிர சோதனை நடத்த உத்தரவிட்டார்.

    குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் நேற்று மதியம் குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன், ஏட்டுகள் லட்சுமி மஞ்சுநாத் உள்ளிட்ட போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆந்திராவில் இருந்து தமிழ்நாடு நோக்கி வந்த தனியார் பஸ்சை நிறுத்தி பயணிகள் உடைமைகளை சோதனை செய்தனர்.

    பஸ்சில் பயணம் செய்த பயணியிடம் இருந்த ஒரு பையில் சுமார் 300 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது. இதனை தொடர்ந்து கஞ்சா கடத்தி வந்த பயணியை குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையம் கொண்டு வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். 

    இதில் கஞ்சா கடத்தி வந்தது குடியாத்தம் செதுக்கரை ஜீவாநகரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரின் மகன் தினகரன் (வயது 20) என தெரியவந்தது குடியாத்தம் நகரில் சிறுசிறு பொட்டலங்களாக கஞ்சா விற்பனை செய்ய கொண்டு செல்வது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தினகரனை கைது செய்தனர்.
    Next Story
    ×