என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
கிருஷ்ணகிரியில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில்மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கிருஷ்ணகிரி:
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக கிருஷ்ணகிரி வட மேற்கு மண்டலம் சார்பில் பள்ளிகல்வித்துறையை மேம்படுத்த வலியுறுத்தி மண்டல அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நேற்று நடந்தது.
இதற்கு மாவட்ட தலைவர் வடிவேலு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் வரவேற்றார். மாவட்ட தலைவர்கள் பாபுசுந்தரம் (தர்மபுரி), சுதர்சனம் (திருப்பத்தூர்), ஜெயராஜ் சாமுவேல் (திருவண்ணாமலை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில சட்ட செயலாளர் சீனிவாசன், மேற்கு மண்டல செயலாளர் மாதேசன், மண்டல மகளிர் அணி செயலாளர் ஆனந்தி மாலா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இதில் ஆசிரியர்கள் பாதுகாப்பிற்கும், மாணவர்களை நெறிப்படுத்தவும் புதிய நெறிமுறைகள் அடங்கிய அரசாணை வெளியிட வேண்டும்.
அனைத்து பள்ளிகளுக்கும் அமைச்சு பணியாளர்களையும், அடிப்படை பணியாளர்களையும் நியமிக்க வேண்டும். அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படும் நலதிட்டங்கள், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் நீட்டித்திட வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் தர்மபுரி மாவவ்ட பொருளாளர் அப்துல் அஜீஸ், அமைப்பு செயலாளர் நாகையா, தலைமையிட செயலாளர் சக்திவேல், மகளிர் அணி செயலாளர் கற்பகம், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் சிவப்பிரகாசம், பொருளாளர் தமிழ்செல்வன், அமைப்பு செயலாளர் குபேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






