என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாம்பரம் மாநகராட்சி
    X
    தாம்பரம் மாநகராட்சி

    தாம்பரம் மாநகராட்சி மன்ற கூட்டம் நாளை நடைபெறுகிறது

    வார்டு பிரச்சினைகள் தொடர்பாக முதல் கூட்டத்திலேயே காரசாரமாக விவாதிக்க உறுப்பினர்கள் தயாராகி வருகின்றனர். சொத்துவரி உயர்த்தப்பட்டது குறித்தும் கடும் விவாதம் நடைபெறும் என தெரிகிறது.
    தாம்பரம்:

    சென்னையை அடுத்த தாம்பரம் புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சி ஆகும். இப்போது நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 70 வார்டுகளில் போட்டியிட்ட தி.மு.க. கூட்டணி 56 வார்டுகளில் வெற்றி பெற்றது. 9 வார்டுகளில் அ.தி.மு.க. கூட்டணி ஜெயித்தது.

    இதனால் தி.மு.க.வை சேர்ந்த வசந்தகுமாரி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்ற பதவிகளுக்கும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இதையொட்டி தாம்பரம் மாநகராட்சியின் முதல் மன்ற கூட்டம் நாளை காலை (திங்கள்கிழமை) 10 மணிக்கு நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் பார்வைக்கு 171 ‘சப்ஜெக்ட்’ வைக்கப்படுகிறது.

    மாநகராட்சிக்கு தனியாக சின்னம் தயாரிக்கப்பட்டு மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்படுகிறது. குடிநீர், கழிவுநீர், சொத்துவரி, கடை ஏலம் உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் பற்றி நாளைய கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

    வார்டு பிரச்சினைகள் தொடர்பாக முதல் கூட்டத்திலேயே காரசாரமாக விவாதிக்க உறுப்பினர்கள் தயாராகி வருகின்றனர். சொத்துவரி உயர்த்தப்பட்டது குறித்தும் கடும் விவாதம் நடைபெறும் என தெரிகிறது.

    Next Story
    ×