என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வழக்குப்பதிவு
    X
    வழக்குப்பதிவு

    மின் வயர்கள் திருட்டு

    விருதுநகர் அருகே ரூ.3 லட்சம் மதிப்புள்ள மின் வயர்கள் திருட்டு போனது.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் இனாம்ரெட்டியபட்டி பகுதியில் மின்வாரியம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கம்பத்தில் இருந்த 2400 மீட்டர் மின்வயர்கள் மற்றும் பல கிலோ எடையுடைய செப்புகம்பிகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். 

    இதுகுறித்து சூலக்கரை மின்வாரிய உதவி பொறியாளர் முருகவேல் சூலக்கரை போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின் வயர்கள், செப்பு கம்பிகளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். திருடுபோன வயர், செப்பு கம்பியின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.
    Next Story
    ×