என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாயம்
இளம்பெண் உள்பட 2 பேர் மாயம்
சிவகாசி அருகே இளம்பெண் உள்பட 2 பேர் மாயமானார்கள்.
சிவகாசி
சிவகாசி அருகே உள்ள நதிக்குடியைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவரது மகள் கனகராணி(22). இவர் அங்குள்ள தனியார்மில்லில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று வேலைக்கு சென்ற கனகராணி பின்னர் வீடுதிரும்பவில்லை. பலஇடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் அருப்புக்கோட்டை அருகே உள்ள வெள்ளை கோட்டையை சேர்ந்த மீனாட்சி(41) என்பவர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவுக்குச் சென்றபோது திடீரென மாயமானார்.
இதுகுறித்து அவரது தாய் பரமேஸ்வரி (90) கொடுத்த புகாரின்பேரில் அருப்புகோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






