என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் போலீசார் துப்புரவு பணி செய்த காட்சி.
வேலூர் உள்பட 4 மாவட்டங்களில் 99 போலீஸ் நிலையம், அலுவலகம், குடியிருப்புகளில் மாஸ் கிளீனிங் மாதந்தோறும் செய்யப்படும் என அறிவிப்பு
வேலூர் உள்பட 4 மாவட்டங்களில் 99 போலீஸ் நிலையம், அலுவலகம், குடியிருப்புகளில் மாஸ் கிளீனிங் மாதந்தோறும் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர்:
தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் போலீஸ் அலுவலகம் போலீசார் குடியிருப்புகளில் மாதந்தோறும் 2&வது சனிக்கிழமைகளில் மாஸ் கிளீனிங் செய்ய டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று போலீசார் ஒட்டுமொத்த துப்புரவு பணியை மேற்கொண்டனர்.
அனைத்து போலீஸ் நிலையம் ஆயுதப்படை குடியிருப்புகளில் போலீசார் ஒட்டுமொத்த துப்புரவு பணியில் ஈடுபட்டனர். போலீஸ் நிலைய வளாகம் மற்றும் பதிவேடுகள் போன்றவை சுத்தம் செய்யப்பட்டது.
வேலூர் சரக டி.ஐ.ஜி.ஆனி விஜயா போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் இன்று வேலூர் போலீஸ் நிலையம் மற்றும் ஆயுதக் குடியிருப்பில் நடந்த ஒட்டுமொத்த துப்புறவு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
வேலூர் உட்பட 4 மாவட்டங்களில் 99 போலீஸ் நிலையம் மற்றும் அலுவலகங்கள் போலீஸ் குடியிருப்புகளில் ஒட்டுமொத்த துப்புரவு பணி செய்யப்பட்டதாக டி.ஐ.ஜி. ஆனி விஜயா தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்தில் 23 போலீஸ் நிலையம், 3 அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், 4 போக்குவரத்து காவல் நிலையம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், 700 வீடுகளைக் கொண்ட ஆயுதப்படை குடியிருப்பு மற்றும் போலீஸ் நிலையங்களை ஒட்டி உள்ள குடியிருப்புகளில் இன்று ஒட்டுமொத்த மாஸ் கிளீனிங் செய்யப்பட்டது.
போலீஸ் நிலையங்களில் உள்பகுதி மற்றும் வளாகங்களில் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. போலீஸ் நிலையங்களில 900 &க்கும் மேற்பட்ட பைக் மற்றும் 4 சக்கர வாகனங்கள் கழிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள் போலீஸ் நிலையங்களில் தேங்கிக் கிடக்கின்றன.இதில் உரிமை கோரும் வாகனங்கள் திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவையில்லாமல் கிடக்கும் வாகனங்களை அப்புறப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் போலீஸ் நிலையங்களில் அதிகளவில் இடம் கிடைக்கும். புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தவும் வசதியாக இருக்கும்.
இந்த ஒட்டுமொத்த பணி மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை களில் தொடர்ந்து செய்யப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தெரிவித்தார்.
Next Story






