search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்டைநாதர் கோவிலில் திருமுலைப்பால் விழா
    X
    சட்டைநாதர் கோவிலில் திருமுலைப்பால் விழா

    சட்டைநாதர் கோவிலில் திருமுலைப்பால் விழா

    சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலைப்பால் விழா திருப்பணிகளையொட்டி எளிமையாக நடந்தது
    சீர்காழி:

    சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட சட்டைநாதர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் திருநிலை நாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள்பாலிக்கிறார்.

    இக்கோவிலில் மலை மீது தோணியப்பர், உமா மகேஸ்வரி அம்மன், சட்டநாதர் ஆகிய சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர். திருஞானசம்பந்தருக்கு 7ம் நூற்றாண்டில் உமையம்மை ஞானப்பால் வழங்கிய வரலாற்று நிகழ்வு இக்கோவில் பிரம்ம தீர்த்தக் குளக்கரையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சி ஆண்டு தோறும் இக்கோவிலில் 10 நாள் பிரமோற்சவமாக கொடியேற்றத்துடன் தொடங்கி 2-ம் நாள், திரு-முலைப்பால் திருவிழாவாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருமுலைப்பால் திருவிழா பக்தர்கள் மிகக்-குறைவாக கலந்து கொண்ட நிலையில் எளிமையாக நடைபெற்றது.

    சட்டைநாதர் கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் செய்திட தருமபுரம் ஆதீனம் ஏற்பாட்டின்படி திருப்பணிகள் தொடங்கப்பட்டு பாலஸ்தாபனம் செய்-யப்பட்டு உள்ளது. இதனால் உற்சவங்கள் ஆகம விதிப்படி நடைபெறாது.
     
    இதனிடையே ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் வழங்கும் நிகழ்வு தடைபடக் கூடாது என்பதற்காக மிக எளிமையாக விழா நடைபெற்றது.
    முன்னதாக எதாஸ்தானத்திலிருந்து திருஞானசம்பந்தர் பிரம்மபுரீஸ்வரர் சன்னதி அருகில் எழுந்தருளி அங்கு திருஞானசம்பந்தருக்கு 21 வகையான நறுமண திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், செய்யப்பட்டு மலர்கள், ஆபரணங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    தொடர்ந்து மலைமீது எழுந்தருளி உமையம்மையிடமிருந்து ஞானப்பாலை சிவாச்சாரியர்கள் திருஞானசம்பந்தருக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
    இதில் மிகக் குறைவான பக்தர்கள் பங்கேற்று தங்கள் இல்லங்களில் இருந்து எடுத்து வந்த பாலை திருஞானசம்பந்தருக்கு நிவேதனம் செய்து வழிபாடு செய்தனர். அதன் பின்னர் திருஞான-சம்பந்தர் எதாஸ்தானம் திரும்பினார்.
    Next Story
    ×