search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்
    X
    ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்

    ராட்சத குழாய்களை மலைபோல் குவித்துள்ள ஓ.என்.ஜி.சி.

    செம்பனார்கோவில் அருகே திருவிளையாட்டத்தில் ராட்சத குழாய்களை மலைபோல் குவித்து வைத்துள்ள ஓ.என்.ஜி.சி&யை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், திருவி-ளையாட்டம் கிராமத்தில் ஆயிரக்கணக்காக ராட்சத குழாய்களை ஓ.என்.ஜி.சி நிறுவனம் இரவோடு, இரவாக மலைப்போல் குவித்து வைத்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்-தியுள்ளது.

    குழாய்களை உடனடியாக அப்புறப்படுத்தக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் குழாய்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள கிடங்கின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன், விவசாய சங்க மாவட்ட தலைவர் டி.சிம்சன், 
    விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜி.ஸ்டாலின், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிங்காரவேலன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.வெண்ணிலா, விஜயகாந்த், மாவட்டக்குழு உறுப்பினர்கள் காபிரியேல், கலைச்செல்வி, அம்மையப்பன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள், வாலிபர் சங்கம், மாதர் சங்க நிர்வா-கிகள், விவசாயிகள் போராட்டத்தில் கலந்துக்கொண்டனர்.

    போராட்டம் குறித்து மாவட்ட செயலாளரும், திருவிளையாட்டம் ஊராட்-சியின் முன்னாள் தலைவருமான பி.சீனிவாசன் கூறும் போது, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்தும் விளைநிலங்களை அழிக்கும் வகையில் பல்வேறு பணிகள் நடந்த வண்ணம் உள்ளது.

    திருவிளை-யாட்டம் கிராமத்--தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓ.என்.ஜி.சி. குழாய்--களை பதித்தபோது 3 மீட்டர் அகலத்திற்கு மட்டுமே விவசாயிகளிடமிருந்தும், குடியிருப்புவாசிகளிடமிருந்து பெற்ற நிலையில் தற்போது அதே இடங்களில் 13 மீட்டர் வரை இடங்களை ஆக்கிரமிக்க முயற்சித்து வருகிறது.பல இடங்களில் குடியிருப்புகளை காலிசெய்ய சொல்லி மிரட்டுவதாகவும் தகவல் வருகிறது. 

    இச்சூழலில் தான் ஓரிரு நாட்களாக ராட்சத குழாய்களை ஓ.என்.ஜி.சி நிறுவனம் மலைபோல இங்கு குவித்து வைத்துள்ளது. மாவட்டத்தில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்ற பிறகு அப்புறப்படுத்திய ஓ.என்.ஜி.சி நிறுவனம். அந்த குழாய்களை திருவிளையாட்டம் கிராமத்தில் வந்து இறக்கி வைத்துள்ளது. பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    போராட்டத்தையடுத்து தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வாரத்திற்குள் குழாய்களை அப்புறப்படுத்தி விடுவதாக உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுகிறோம். ஒரு வாரத்திற்-குள்ளாக குழாய்களை அப்புறப்படுத்தவில்லை எனில் மீண்டும் போராட்-டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.
    Next Story
    ×