search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    விவசாயியை தாக்கிய 3 பேர் கைது

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே விவசாயியை தாக்கிய 3 பேரை கைது செய்தனர்.
    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள மஜித் கொல்லஅள்ளி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது45).  விவசாயியான இவரது நிலத்தில் உள்ள ஒரு மரத்தை அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் (25), பாஞ்சாலி (49), வேல்முருகன் ஆகியோர் சேர்ந்து வெட்டியதாக கூறப்படுகிறது. 

    இதனை லட்சுமணன் சென்று தட்டி கேட்டுள்ளார். இதனால் இவர்களுக்குள் கடந்த 5&ந்தேதி அன்று தகராறு ஏற்பட்டது. 

    இதில் ஆத்திரமடைந்த சக்திவேல் உள்பட 3 பேரும் சேர்ந்து லட்சுமணனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். இதில் படுகாயம் அடைந்த லட்சமணனை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

    இது குறித்து அவர் மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சக்திவேல் (25), பாஞ்சாலி (49), வேல்முருகன் ஆகியோரை கைது செய்தனர். கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×