என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
காஞ்சிபுரத்தில் 26-ந் தேதி பறிமுதல் செய்யப்பட்ட 62 வாகனங்கள் ஏலம்
அரசுக்கு செலுத்த வேண்டிய சாலை வரி உள்ளிட்ட நிலுவைக்காக சிறைப்பிடிக்கப்பட்ட 62 வாகனங்கள் மற்றும் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலக அரசு வாகனமும் ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
அரசுக்கு செலுத்த வேண்டிய சாலை வரி உள்ளிட்ட நிலுவைக்காக சிறைப்பிடிக்கப்பட்ட 62 வாகனங்கள் மற்றும் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலக அரசு வாகனமும் ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி வருகிற 26-ந் தேதி காலை 11 மணிக்கு காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விலை நிர்ணய குழுவினால் ஏலம் விடப்படும்.
ஏலம் விடப்படும் வாகனங்களின் விவரங்கள் உள்ளிட்டவைகளை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வேலை நாட்களில் பார்வையிடலாம்.
உரிய கட்டணம் செலுத்தி ஒப்பந்த படிவத்தை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






