என் மலர்
உள்ளூர் செய்திகள்

செயற்குழுக் கூட்டம் நடைபெற்ற போது எடுத்தப்படம்
காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை
சத்துணவுத்துறையில் காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டுமென தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
புதுக்கோட்டை:
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்ட தலைவர் அன்பு தலைமையில் புதுக் கோட்டையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சீத்தாலெட்சுமி, பொருளா ளர் பிச்சைமுத்து ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்து பேசினர்.
அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜபரு ல்லா, துணைத் தலைவர் குமரேசன் ஆகியோர் வாழ்த் திப் பேசினர். சத்து ணவு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் சத்தி நிறைவுரை யாற்றினார். மாவட்ட துணைச் செயலாளர் பாண்டி நன்றி கூறினார்.
சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதிய த்தை மாற்றி வரையறுக் கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்பப்பாதுகாப்புடன் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.9,000 ஆயிரம் வழங்க வேண்டும்.
ஒட்டுமொத்த பணிக்கொ டையாக அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும்.
எரிவாயு சிலிண்டர் தேவைக்கு ஏற்ப அரசே வழங்க வேண்டும். தகுதி உள்ள சத்துணவு ஊழியர் களுக்கு கல்வித்தகுதி அடிப்ப டையில் அரசுத் துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல பெண் ஊழியர்களுக்கு 12 மாதம் ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
Next Story






