என் மலர்
உள்ளூர் செய்திகள்

பஸ் மோதி பலியான வாலிபர்.
காவேரிப்பட்டணம் அருகே ஆந்திரா பஸ் மோதி வாலிபர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே ஆந்திரா பஸ் மோதி வாலிபர் பலியானார்.
காவேரிப்பட்டணம்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே நாட்டான் கொட்டாய் என்ற இடத்தில் நேற்று இரவு 7 மணி அளவில் ஆந்திர மாநில அரசு பஸ் திருப்பதியில் இருந்து தருமபுரிக்கு சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராதவிதமாக நாட்டான் கொட்டாய் அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரோட்டை கடக்க நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆந்திரா பஸ் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பலி யானார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக் குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த விபத்து பற்றி தகவலறிந்த காவேரிப்பட்டணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப் பற்றி காவேரிப் பட்டணம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது. இதுகுறித்து காவேரிப் பட்டினம் இன்ஸ்பெக்டர் முரளி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விபத்தில் இறந்தவர் யார்? என்பது பற்றி விவரம் தெரியவில்லை. இதுபற்றி தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக காவேரிப்பட்டினம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க லாம் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி தெரிவித்துள்ளார்.
Next Story






