search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாகூரில் கண்காணிப்பு கேமரா மையத்தை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் திறந்து வைத்தார்.
    X
    பாகூரில் கண்காணிப்பு கேமரா மையத்தை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் திறந்து வைத்தார்.

    பாகூரில் குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா

    பாகூரில் குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராவை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் இயக்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    பாகூர் மார்க்கெட் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க கேமரா பொருத்தி கண்காணிப்பு பணியை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் தொடங்கி வைத்தார். பாகூர் மார்க்கெட் வீதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மேலும் திருமண மண்டபம், பள்ளிகள், அரசு அலுவலகங்கள், புகழ் பெற்ற சிவன் கோவில் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் மார்க்கெட் வீதியில் அடங்கியுள்ளது.
     
    இந்த பகுதியில் உள்ள கடைகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தன. மேலும் போக்குவரத்து பிரச்சினை இருந்து வந்தது. இதனை சரிசெய்ய கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவெடுக்கப்பட்டது. பாகூர் வியாபாரி சங்கம் சார்பில் சார்பில் வழங்கப்பட்ட கண்காணிப்பு கேமரா மற்றும் ஒலிபெருக்கி மார்க்கெட் வீதியில் பொருத்தப்பட்டுள்ளது. 

    இதன் கண்காணிப்பு மையம் பாகூர் சிவன் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் கலந்து கொண்டு கண்காணிப்பு கேமரா சேவையை தொடங்கி வைத்தார். இந்த சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்ட இடங்களில் ஒலி பெருக்கிகளும் பொருத்தப்பட்டு உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ், சப்-இன்ஸ் பெக்டர்கள் விஜயகுமார், தமிழரசன் மற்றும் போலீசார். பாகூர் வியாபாரி சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், கடை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×