search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலி

    பால் வாங்க சென்ற மூதாட்டி அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார்.:
    புதுச்சேரி:

    புதுவை தட்டாஞ்சாவடி கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தணிகாசலம். இவரது மனைவி மங்கையர்கரசி (வயது 80) இவர் அதிகாலை பால் வாங்க கஸ்தூரி பாய் சந்திப்பில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராத விதமாக மங்கையர்கரசி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. 

    இதில் தூக்கி வீசப்பட்ட மங்கையர்கரசி தலையில் படுகாயம் அடைந்தார் உடனே அங்கிருந்தவர்கள் மங்கையர்கரசியை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மங்கையர்கரசி இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

    இது குறித்து அவரது மகன் அரவிந்தன் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போக்கு வரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை கன்னியக்கோவில் அருகே மணப்பட்டு சின்ன வீதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 35) சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் புதுவைக்கு வந்து கொண்டு இருந்தார். 

    இடையார் பாளையம் என்.ஆர். நகர் அருகே வந்த போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக மகேஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தடுமாறி விழுந்த மகேசுக்கு இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். 

    பின்னர் இது குறித்து கிருமாம்பாக்கம் போக்கு வரத்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×