என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வள்ளி தெய்வானையுடன் முருகள் அருள்பாலிப்பு.
    X
    வள்ளி தெய்வானையுடன் முருகள் அருள்பாலிப்பு.

    வைத்தீஸ்வரன் கோவிலில் கிருத்திகை வழிபாடு

    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் கிருத்திகை வழிபாடு நடந்தது.
    சீர்காழி:

    வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்குட்பட்ட தையல் நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோவிலில் பங்குனி மாத கிருத்திகை வழிபாடு நடைபெற்றது. இக்கோவிலில் தனி சன்னதியில் செவ் வாய்க்கு அதிபதியான அங்காரகன், செல்வமுத்துக் குமாரசுவாமி ஆகிய சுவாமிகள் அருள்பாலிக் கின்றனர்.

    இங்கு கிருத்திகையை யொட்டி செல்வமுத் துக்குமார சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கிருத்திகை மண்டபம் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்துக் குமார சுவாமிக்கு மஞ்சள், திரவியபொடி, இளநீர் உள்ளிட்ட 21 வகை நறுமண திரவியப் பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    இதில், தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானம ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாசாரிய சுவா மிகள், திருப்பனந்தாள் காசிமடத்து அதிபர் எஜமான் சுவாமிகள் ஆகியோர் பங் கேற்று தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×