என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பணம் மோசடி.
    X
    பணம் மோசடி.

    வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி

    வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    விருதுநகர்

    சாத்தூர் வெங்கடாசல புரம் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் ஹரிசங்கர்(வயது 26). இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தான் பெங்களூர் கெம்பேகவுடா விமான நிலையத்திலிருந்து பேசுவதாகவும், இங்கு மெக்கானிக்கல் சூப்பர் வைசர் வேலை தயாராக இருப்பதாகவும், நீங்கள் குறிப்பிட்ட தொகையை செலுத்தினால் வேலையில் சேர்ந்து விடலாம் என தெரிவித்தார். 

    மேலும் ஹரி சங்கரிடம் கவுதம், மித்ரா, மல்கோத்ரா, ஷகில் உள்பட 7 பேர் தொடர்ந்து வேலை குறித்து பேசியுள்ளனர். இதனை நம்பிய ஹரிசங்கர் குறிப்பிட்ட வங்கி கணக்கில் பல்வேறு தவணைகளில் ரூ.11 லட்சத்து 98ஆயிரத்தை செலுத்தியுள்ளார்.

    இந்தநிலையில் அவர்கள் மேலும் பணத்தை வங்கிகணக்கில் செலுத்துமாறு கூறி வந்துள்ளனர். இதனால் ஹரிசங்கருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

    இதனைத்தொடர்ந்து அவர் தனது பணத்தை திருப்பிதருமாறு கேட்டுள்ளார்‌. அதன்பின் அவர்கள் செல்போன் அனைத்தும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது. அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. 

    இதன்பின்தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஹரிசங்கர் பணமோசடி தொடர்பாக விருதுநகர் மாவட்ட போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×