search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பக்தர் ஒருவர் நேர்த்திக் கடன் செலுத்திய காட்சி.
    X
    பக்தர் ஒருவர் நேர்த்திக் கடன் செலுத்திய காட்சி.

    மழைமாரியம்மன் கோவில் தேரோட்டம்

    மழைமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை திருக்கோயில்களைச் சேர்ந்த ராஜாராஜா பழைய வெண்ணாவல் நாட்டைச் சேர்ந்த சேந்தாக்குடி  ஸ்ரீ மழைமாரியம்மன் தேர்திரு விழாவை தொடர்ந்து  கடந்த மாதம் 20&ந்தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

    விழாவில் 27&ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கிய ஸ்ரீமழைமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.திருவிழாவில் தொடர்ந்து முக்கியஸ் தர்களால் மண்டகப்படிகயும், நடைபெற்றன.

    3&ந் தேதி ஸ்ரீ மழைமாரியம்மனுக்கு பொங்கல் விழாவும் 4&ந்தேதி தீமிதித் திருவிழாவும், பால்காவடி மற்றும் காவடிகளும் அப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை ஸ்ரீ மழைமாரியம்மனுக்கு செலுத்தினர்.

    10 ஆம் நாள் நிறைவாக ஸ்ரீமழைமாரியம்மன் தேரோட்ட நிகழ்ச்சியில் தேரை அப்பகுதி மக்கள் வடம் பிடித்து ஸ்ரீ மழைமாரியம்மன் கோவிலின் நா ன்கு புறங்களிலும் சுற்றி வந்து நிலையை அடைந்தது . வல்லாத்திராக்கோட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    திருவிழாவில் நாடகம் மற்றும் கலைநிகழ்ச்சிகளும், மதியம் அன்னதானமும் நடந்தது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் இளைஞர்கள் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

    Next Story
    ×