என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த டிரைவர் சாவு
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த டிரைவர் நிலைதடுமாறி தவறிவிழுந்து பலியானார்.
பெருந்துறை:
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த டிரைவர் நிலைதடுமாறி தவறிவிழுந்து பலியானார்.
பெருந்துறையில் அடுத்துள்ள கருங்கண்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 43). டிரைவர். சம்பவத்தன்று பெருந்துறையில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக தனது மோட்டர்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
கோவை மெயின் ரோடு மடத்துபாளையம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி லோகநாதன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Next Story






