என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
கறி சோறு சாப்பிட்ட பெண் திடீர் சாவு
ஈரோட்டில் கறி சோறு சாப்பிட்ட பெண் திடீரென இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோட்டில் கறி சோறு சாப்பிட்ட பெண் திடீரென இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு அசோகபுரி கோடைபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மனைவி கோவிந்தம்மாள் (வயது 50). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமண மாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
சம்பவத்தன்று இரவு சாமிநாதனும், கோவிந்த அம்மாளும் வீட்டில் கறி சாப்பாடு சாப்பிட் டுள்ளனர். சிறிது நேரத்தில் கோவிந்தம்மாள் வாந்தி எடுத்து மயக்கமடைந்து விழுந்து உள்ளார்.
உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கோவிந் தம்மாள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






