என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அலகு குத்தியபடி தீ மிதித்த பக்தர்.
    X
    அலகு குத்தியபடி தீ மிதித்த பக்தர்.

    சாத்தூர் மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா

    சாத்தூர் மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடந்தது.
    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான மாரியம்மன் காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனிப் பொங்கல் திருவிழா மிகவும் பிரசித்திபெற்றது. கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக பூக்குழி திருவிழா ரத்து செய்யப்பட்டது.

    இந்த ஆண்டுக்கான பங்குனி மாத திருவிழா கடந்த மாதம் 27ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு மாரியம்மன் மற்றும் காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும் சாத்தூரில் முக்கிய வீதிகளில் 7 நாட்களாக சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் வீதி உலா நடை பெற்றது.

    பக்தர்கள் 1008 பால்குடம் மற்றும் பொங்கல் வைத்து அம்மனை வழிப்பட்டனர். பங்குனி பொங்களின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த பூக்குழி திருவிழாவில் திருநங்கைகள் உள்பட சுமார் 480 பக்தர்கள் காளியம்மன் கோவிலுக்கு முன்பாக இருந்த பூக்குழியில் இறங்கிநேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.  சில பக்தர்கள் அலகு குத்தியபடி பூக்குழி இறங்கினர்.

    பூக்குழி திருவிழாவை சாத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×