என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வேலூரில் 150 கிலோ குட்கா காருடன் பறிமுதல்

    வேலூரில் 150 கிலோ குட்கா காருடன் பறிமுதல் செய்யப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் வடக்கு போலீஸ் நிலைய போலீசார் நேற்றிரவு பழைய பைபாஸ் சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது பெங்களூரில் இருந்து வந்த காரை மடக்கி சோதனையிட்டனர்.

    அதில் 150 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா பொருட்கள் இருந்தன. இதனை காரில் கடத்தி வந்த பர்கூரை சேர்ந்த தீபா ராமன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.மேலும் காருடன் குட்காவை பறிமுதல் செய்தனர்.

    பெங்களூரில் இருந்து வேலூருக்கு இந்த குட்கா கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×