search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய வளர்ச்சித் திட்ட பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
    X
    புதிய வளர்ச்சித் திட்ட பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

    13 வளர்ச்சி திட்டப்பணிகள் அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்

    சென்னிமலை பேரூராட்சியில் 13 வளர்ச்சி திட்டப்பணிகள் அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

    சென்னிமலை:

    சென்னிமலை பேரூராட்சியில் 13 வளர்ச்சி திட்டப்பணிகள் அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.


    சென்னிமலை பேரூராட்சி வாரச் சந்தை வளாகத்தில் ரூ.66 லட்சம் மதிப்பீட்டிலான 13 புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்க விழா நடந்தது மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் தலைமை தாங்கினார். அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்து பேசினார். 

    இதில், மாவட்ட கவுன்சிலரும், சென்னிமலை மேற்கு ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளருமான எஸ்.ஆர். எஸ்., செல்வம், சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீ தேவி அசோக், துணைத் தலைவர் சவுந்தரராஜன், சென்னி மலை யூனியன் சேர்மேன் காயத்ரி இளங்கோ, செயல் அலுவலர் ஆயிஷா, இளநிலை பொறியாளர் தியாகராஜன், பெருந்துறை தாசில்தார் கார்த்திக், சென்னிமலை நகர தி.மு.க., செயலாளர் எஸ்.எம்., ராமசாமி, கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் சி.பிரபு, நகர இளைஞர் அணி அசோக், உட்பட பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னிமலை நகரப் பகுதியில் பொதுமக்களுக்கு நேரம் அறிவிக்கும் வகையில் பஸ் நிலையத்தில் மின் சங்கு ஒலிக்கும் நடைமுறை கடிகாரங்கள் பரவலாக மக்களிடம் இல்லாத காலகட்டங்களில் இருந்து   சங்கு ஒலிக்கும் நடைமுறை இருந்து வந்து. சங்கு பழுதானதால் கடந்த 12 வருடங்களாக அதை டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் சரி செய்யாமல் சங்கு ஒலிக்கும் பணி நிறுத்தப்பட்டு இருந்தது. புதியதாக பொறுப்பேற்ற டவுன் பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட கவுன்சிலர்களின் சீரிய முயற்சியால் மின் சங்கின் பழுது நீக்கம் செய்து நேற்று முதல் ஒலிக்கும் பணி தொடங்கியது. டவுன் பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீதேவி அசோக் தலைமையில் இதை செய்தி துறை அமைச்சர் மு.பெ., சாமிநாதன் தொடங்கி வைத்தார். 

    இதில் டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர் எஸ்.ஆர்.எஸ்., செல்வம், கிழக்கு ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர் பிரபு, நகர தி.மு.க., செயலாளர் ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். இனி மேல் தினமும் பொது மக்களுக்கு நேரத்தை குறிக்கும் வகையில் காலை 5 மணி, காலை 8 மணி, மதியம் 1 மணி, மாலை 6 மணி ஆகிய நான்கு முறை மின் சங்கு ஒலிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×