search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    வடமாநில வாலிபருக்கு பீர் பாட்டிலால் குத்து

    நேசமணி நகரில் வடமாநில வாலிபருக்கு பீர் பாட்டிலால் குத்து - நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறில் நண்பர் வெறிச்செயல்
    நாகர்கோவில்:

    பீகார் தாரியபூர் பகுதியைச் சேர்ந்தவர் அலதாப் ஆலம் (வயது24). இவர் நாகர் கோவிலில் தங்கி கொத்தனார் வேலை செய்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தளவாய்புரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார்.

    இவருடன் அவரது நண்பர்கள் சிலரும் தங்கி இருந்தனர். நேற்று இரவு அலதாப் ஆலம் மற்றும் அவரது நண்பர்கள் நடனமாடினார்கள். அப்போது அலதாப் ஆலமிற்கும் நண்பர் ரோகித்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த ரோகித்குமார் பீர் பாட்டிலை உடைத்து அலதாப் ஆலமை சரமாரியாக குத்தினார். இதில் அவர் படுகாயம் அடைந்து கீழே சரிந்து விழுந்தார். பின்னர் அவரது நண்பர்கள் அவரை சிகிச் சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து நேசமணி நகர் போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    அலதாப் ஆலம் கொடுத்த புகாரின் பேரில் ரோகித்குமார் மீது கொலை முயற்சி உள்பட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து ரோகித்குமாரை கைது செய்தனர்.
    Next Story
    ×