என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
விஷம் குடித்து விவசாயி தற்கொலை
கோபிசெட்டிபாளையம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறன்றனர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறன்றனர்.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கணேசன்புதூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 61). விவசாயி. இவர் காலில் நீர்கட்டி ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.
இதற்காக அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என கூறப்படுகிறது.
இதனால் முருகன் மன வருத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது குருணை மருந்து (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார்.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்சு மூலம் கோபி செட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






