என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முகாம்
    X
    முகாம்

    மருத்துவ மதிப்பீட்டு முகாம்

    வத்திராயிருப்பில் மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடந்தது.
    வத்திராயிருப்பு

    வத்திராயிருப்பு வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. மனநல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், காது-, மூக்கு, -தொண்டை நல மருத்துவர், கண்பார்வை நல மருத்துவர், ஆர்த்தோ மருத்துவர் ஆகியோர் முகாமில் கலந்துகொண்டு மாற்றுத்திறன் குழந்தைகளை பரிசோதித்தனர். 

    இதில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குதல், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் வழங்குதல், புதிதாக வங்கி கணக்கு தொடங்குதல், ஸ்மார்ட் கார்டு பதிவு செய்தல், புதிய ஆதார் அட்டைக்கு பதிவு செய்தல், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு புதிய உபகரணங்கள் தேவைப்படுவோருக்கு பதிவு செய்தல் போன்ற அனைத்து உதவிகளும் துறைகள் மூலம் வழங்கப்பட்டன. 

    இதில் 167 மாற்றுத்திறன் குழந்தைகளும், பெற்றோரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர். மாவட்ட திட்ட அலுவலர்  ஜோதிமணி ராஜன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முருகு திருநாவுக்கரசு, மாடசாமி, மகாராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராமுத்தாய் ஆகியோர் கலந்துகொண்டனர். 

    முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி வழிகாட்டலின்படி முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர்,  ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், இயன்முறை மருத்துவர் ஆகியோர் செய்திருந்தனர்.
    Next Story
    ×