என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில் திரண்ட பொதுமக்கள்
Byமாலை மலர்3 April 2022 9:19 AM GMT (Updated: 3 April 2022 9:19 AM GMT)
பொன்னமராவதி அருகே இன்று காலை நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள செவலூர் செவிலி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. பொதுவாக பொன்னமராவதி சுற்று வட்டார பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடை காலம் துவங்கும் முன் விவசாய கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடைபெறும்.
ஜாதி, மதம் பாராமல் நடைபெறும் இந்த திருவிழா கொரோனா பெறுந்தொற்று ஊரடங்கு காரணமாகவும் போதிய நீரின்றியும் மீன்பிடி திருவிழா நடைபெறவில்லை
இந்தநிலையில் இன்று ஞாயிற்றுகிழமை செவலூர் ஊராட்சியில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஒரு கிலோ மீட்டர் நீளம் கொண்ட செவிலி பெரிய கண்மாயில் செவலூர், மலையடிப்பட்டி, குழிபிறை, பனையப்பட்டி, ஆத்தூர், வீரராணாம்பட்டி, செம்பூதி, ஆலவயல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியைச்சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கண்மாயில் குவிந்தனர்.
பாரம்பரிய முறையில் கண்மாயில் இறங்கி பொதுமக்கள் ஊத்தா, வலை, கூடை, பரி, கச்சா ஆகியவைகளை கொண்டு லாபகரமாக மீன் பிடிக்கத்தொடங்கினர். அதில் ஒவ்வொருவர் கைக ளுக்கும் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குரவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன.
அதனை மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு கொண்டு சென்றனர். இதன் மூலம் இன்று ஊரே மீன் கமழும் வாசம் அனைவரையும் சுண்டி இழுத்தது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள செவலூர் செவிலி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. பொதுவாக பொன்னமராவதி சுற்று வட்டார பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடை காலம் துவங்கும் முன் விவசாய கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடைபெறும்.
ஜாதி, மதம் பாராமல் நடைபெறும் இந்த திருவிழா கொரோனா பெறுந்தொற்று ஊரடங்கு காரணமாகவும் போதிய நீரின்றியும் மீன்பிடி திருவிழா நடைபெறவில்லை
இந்தநிலையில் இன்று ஞாயிற்றுகிழமை செவலூர் ஊராட்சியில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஒரு கிலோ மீட்டர் நீளம் கொண்ட செவிலி பெரிய கண்மாயில் செவலூர், மலையடிப்பட்டி, குழிபிறை, பனையப்பட்டி, ஆத்தூர், வீரராணாம்பட்டி, செம்பூதி, ஆலவயல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியைச்சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கண்மாயில் குவிந்தனர்.
பாரம்பரிய முறையில் கண்மாயில் இறங்கி பொதுமக்கள் ஊத்தா, வலை, கூடை, பரி, கச்சா ஆகியவைகளை கொண்டு லாபகரமாக மீன் பிடிக்கத்தொடங்கினர். அதில் ஒவ்வொருவர் கைக ளுக்கும் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குரவை, ஜிலேபி, கெண்டை, அயிரை, கட்லா, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன.
அதனை மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு கொண்டு சென்றனர். இதன் மூலம் இன்று ஊரே மீன் கமழும் வாசம் அனைவரையும் சுண்டி இழுத்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X