என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ் பேட்டியளித்தார்.
தொடக்கக்கல்வி துறைக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும் - ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் பேட்டி
தொடக்கக்கல்வி துறைக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும் என ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் பேட்டியளித்துள்ளார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோவில் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ் கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக அரசு படிப்படியாக நிவர்த்தி செய்வதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். பல்லாண்டு காலமாக வைத்த கோரிக்கையான சி.பி.எஸ்.இ ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை சட்டமன்ற கூட்டதொடரில் நிச்சயமாக 110 விதியில் அறிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை நாங்கள் அரசுக்கு வைக்கின்றோம். தமிழக முதல்வர் அறிவிப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. பள்ளி கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கி இருக்கிறார்கள். அதற்காக தமிழக அரசுக்கு நன்றியும் பாராட்டுக்களும் தெரிவிக்கின்றோம்.
கொரோனா தொற்று நேரத்திலும் அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் 5 லட்சத்துக்கும் மேலான மாணவர்கள் சேர்த்திருக் கிறார்கள். மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். மாவட்ட கலந்தாய்வு தற்போது நிறுத்தப்பட்டு விட்டது.
மாணவர்களின் வருக பதிவு, சத்துணவு, மாத்திரைகள், மாணவர்கள் மருந்து உண்பது, காய்கறிகள் உள்ளிட்ட 21 வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது. இதனால் ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது. இணையதளம் நெட் பிரச்சனையால் புள்ளி விபரத்தை காலையில் கொடுத்து 1 மணிநேரத்தில் வழங்க வேண்டும் என்பது பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இந்த பிரச்சனை குறித்து ஆணையரிடமும் அமைச்ச ரிடமும் பேசியுள்ளோம்.
ஈராசிரியர் பள்ளிகள், ஓராசியர் பள்ளிகள் ஏராளமாக உள்ளது. இதிலே புள்ளி விபரங்களை எடுக்க சாத்தியமில்லை. புள்ளிவிபரம் தேவை என்றால் கணிணியில் பட்டம்பெற்றவர்கள், பகுதிநேர ஆசிரியர்களுக்கு புள்ளிவிபரம் எடுக்கும் பணியை வழங்கலாம். மேல்நிலை பள்ளியில் உள்ள தலைமையாசியர் தலைமையில் 10 பள்ளிகள் குருவளமையமாக நிர்ணயித்து பள்ளி முடிந்தவுடன் மீள் ஆய்வு செய்கிறார்கள்.
101 அரசாணை தொடக்கக்கல்வித்துறை தனித்துறை ஆக்கி முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். 101 அரசாணையால் கோப்புகள் தேக்கமடைந்து ஆசிரியர்களின் முழு பணபயன் பெறமுடியாமல் பாதிக்கப்படுகிறது.
எனவே 101 அரசாணை ரத்து செய்து தொடக்கக் கல்வித் துறைக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர்களை நியமிக்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
ஆசிரியர் பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோவில் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ் கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக அரசு படிப்படியாக நிவர்த்தி செய்வதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். பல்லாண்டு காலமாக வைத்த கோரிக்கையான சி.பி.எஸ்.இ ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை சட்டமன்ற கூட்டதொடரில் நிச்சயமாக 110 விதியில் அறிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை நாங்கள் அரசுக்கு வைக்கின்றோம். தமிழக முதல்வர் அறிவிப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. பள்ளி கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கி இருக்கிறார்கள். அதற்காக தமிழக அரசுக்கு நன்றியும் பாராட்டுக்களும் தெரிவிக்கின்றோம்.
கொரோனா தொற்று நேரத்திலும் அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் 5 லட்சத்துக்கும் மேலான மாணவர்கள் சேர்த்திருக் கிறார்கள். மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். மாவட்ட கலந்தாய்வு தற்போது நிறுத்தப்பட்டு விட்டது.
மாணவர்களின் வருக பதிவு, சத்துணவு, மாத்திரைகள், மாணவர்கள் மருந்து உண்பது, காய்கறிகள் உள்ளிட்ட 21 வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது. இதனால் ஆசிரியர்களின் கற்றல் கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது. இணையதளம் நெட் பிரச்சனையால் புள்ளி விபரத்தை காலையில் கொடுத்து 1 மணிநேரத்தில் வழங்க வேண்டும் என்பது பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இந்த பிரச்சனை குறித்து ஆணையரிடமும் அமைச்ச ரிடமும் பேசியுள்ளோம்.
ஈராசிரியர் பள்ளிகள், ஓராசியர் பள்ளிகள் ஏராளமாக உள்ளது. இதிலே புள்ளி விபரங்களை எடுக்க சாத்தியமில்லை. புள்ளிவிபரம் தேவை என்றால் கணிணியில் பட்டம்பெற்றவர்கள், பகுதிநேர ஆசிரியர்களுக்கு புள்ளிவிபரம் எடுக்கும் பணியை வழங்கலாம். மேல்நிலை பள்ளியில் உள்ள தலைமையாசியர் தலைமையில் 10 பள்ளிகள் குருவளமையமாக நிர்ணயித்து பள்ளி முடிந்தவுடன் மீள் ஆய்வு செய்கிறார்கள்.
101 அரசாணை தொடக்கக்கல்வித்துறை தனித்துறை ஆக்கி முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். 101 அரசாணையால் கோப்புகள் தேக்கமடைந்து ஆசிரியர்களின் முழு பணபயன் பெறமுடியாமல் பாதிக்கப்படுகிறது.
எனவே 101 அரசாணை ரத்து செய்து தொடக்கக் கல்வித் துறைக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர்களை நியமிக்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
ஆசிரியர் பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






