என் மலர்
உள்ளூர் செய்திகள்

குண்டும் குழியுமாக காட்சி அளிக்கும் சாலை.
செங்கம் அருகே பல ஆண்டுகளாக சீரமைக்காத சாலை
செங்கம் அருகே பல ஆண்டுகளாக சீரமைக்காத சாலையால் கிராம மக்கள் அவதிடைந்துள்ளனர்.
செங்கம்:
செங்கம் ஒன்றியத்திற் குட்பட்ட கரியமங்கலம் ஊராட்சிக் குட்பட்ட கரியமங்கலம், மேல்கரிய மங்கலம், அண்டப்பேட்டை வழியாக பேயாளம்பட்டு, அம்மனூர் வரை செல்லும் சாலை பல வருடங்களாக பழுதடைந்து போக்கு வரத்திற்கு பயன்படுத்த முடியாத சூழல் நிலவி வருகிறது.
கரியமங்கலம் ஊராட்சிக் குட்பட்ட மேல்கரியமங்கலம், அண்டப்பேட்டை பகுதி மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காகவும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்பட விவசாயம் சார்ந்த பொருட்களை சந்தைப்படுத்த அப்பகுதி மக்கள் கிராமத்தில் இருந்து வெளியே செல்ல வேண்டும் என்றால் இந்த சாலையை பயன்படுத்தி செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
கடந்த சில வருடங்களாக அவசர தேவைக்கு கூட வேகமாக கடந்து செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. கரியமங்கலம் தொடங்கி மேல்கரியமங்கலம், அண்டப் பேட்டை, பேயாளம்பட்டு மற்றும் அம்மனூர் கூட்ரோடு செல்லும் சாலையை சீரமைத்து தரமான புதிய சாலைகள் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி கோரிக்கை வடுத்து வருகின்றனர். ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக சம்பந்தப்பட்ட ஊராட்சிக் குட்பட்ட சாலைகளை சீரமைத்து புதிய தரமான சாலைகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story






