என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆரணியில் தனியார் பஸ் பின்பக்க கம்பியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்யும் காட்சி.
ஆரணியில் பஸ் படிக்கட்டில் தொங்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை
ஆரணியில் பஸ் படிக்கட்டில் தொங்கும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
மேலும் இந்த பள்ளிகளில் ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் மூலம் தினமும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் பள்ளி நேரங்களில் அரசு பஸ்கள் போதிய அளவு இயக்கபடுவதில்லை என்று தெரிகின்றன.
இதனால் மாணவ மாணவிகள் அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்வதற்கு நீண்ட நேரம் காத்திருந்து படியில் தொங்கியபடியும் பயணம் செய்கின்ற சூழ்நிலை ஏற்படுகின்றன.
மாணவர்கள் அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளில் படியில் தொங்கியபடியும் பஸ்சின் கம்பியில் தொங்கியவாறு செல்லும் காட்சி சமூக வளைதலங்களில் வைரலாக பரவியதையடுத்து ஆரணி ஆர்.டி.ஒ சரவணன் தலைமையில் காவல்துறை மற்றும் பஸ் பணிமனை மேலாளர்கள் கூட்டம் ஆரணி போக்குவரத்து ஆர்.டி.ஒ அலுவலத்தில் ஆரணி டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் முன்னிலை யில் நடைபெற்றது.
இதில் பஸ்களில் ஆபத்தான முறையில் படியில் தொங்கி செல்லும் மாணவர்களை கண்டறிந்து பள்ளி மூலம் டி.சி வழங்கி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கபடும் என்று ஆரணி டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆரணி வந்தவாசி சேத்பட் உள்ளிட்ட பகுதியில் உள்ள போக்குவரத்து பணிமனை மேலாளர்கள் பங்கேற்றனர்.
Next Story






