என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
குருபரப்பள்ளியில் லாரி மோதி வாலிபர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் லாரி மோதி வாலிபர் பலியானார்.
குருபரப்பள்ளி,
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் யுகேந்திரன் (வயது 21). இவர் குருபரப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த 30&ந் தேதி மாலை அவர் ஓசூர் & கிருஷ்ணகிரி சாலையில் குருபரப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அந்த நேரம் அவ்வழியாக வந்த லாரி யுகேந்திரன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த யுகேந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






