என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    416 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது

    ஈரோட்டில் இன்று 416 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது.
    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று 416 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது.

    கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக சுகாதாரத்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஒவ்வொரு சனிக்கிழமையும் தமிழகத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

    அதன்படி ஈரோட்டில் இன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங் கியது. மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல், 2-ம் தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப் பட்டு வருகிறது. 

    அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலைய ங்கள், நகர்புற சுகாதார மையங்கள், பள்ளிகள் உள்பட 416 மையங்களில் இன்று காலை 9 மணிக்கு தடுப்பூசி முகாம் தொடங்கி யது. மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். 

    தொடர்ந்து இன்று மாலை 5 மணி வரை 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணியானது நடைபெற்று வருகிறது. இப்பணியில் 66 வாகனங்கள், 1,664 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 15 முதல், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர் களுக்கு கோவேக்சின் தடுப்பூசி சிறப்பு முகாம் களில்  செலுத்தப்பட்டது.
    Next Story
    ×