என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகராட்சி கூட்டம் நடந்த காட்சி.
    X
    நகராட்சி கூட்டம் நடந்த காட்சி.

    திருவண்ணாமலையில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்- கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

    திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் முதல் நகர்மன்றக் கூட்டம் நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் நிர்மலா வேல்மாறன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, துணைத் தலைவர் ராஜாங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி பொறியாளர் நீலேஸ்வர் வரவேற்றுப் பேசினார்.

    நேற்று நடைபெற்றது நகராட்சியின் முதல் கூட்டம் என்பதால் கலந்துகொண்ட வார்டு உறுப்பினர்கள் முதலில் தங்களை அறிமுகம் செய்துகொண்டு தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

    மேலும் கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் பேசும்போது:-

    தங்கள் பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். குடிநீர், சாலை வசதிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து நகராட்சி தலைவர் நிர்மலா வேல்மாறன் பேசும்போது:-

    நகராட்சி உறுப்பினர்கள் விடுத்த அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார்.

    கூட்டத்தில் நகராட்சி கடைகளை ஒட்டி உள்ள தனியார் கடைகளின் வாடகை அளவிற்கு நகராட்சி கடைகளின் வாடகை குறைத்து நிர்ணயம் செய்ய வேண்டும்.

    நகராட்சி வருமானம் உயரவும், வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்கவும் கடைவாடகையை முறைப்படுத்தி தரவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுப்பது, காலியாக உள்ள 95 கடைகளை பொதுஏலம் விடுவது, போதிய அளவு குடிநீர் குழாய்கள், ஆழ்துளை கிணறுகள் சீரமைப்பது, குடிநீர் தொட்டி, கால்வாய், சிறுபாலங்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்குவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. வார்டு உறுப்பினர் மருத்துவர் பழனி பேசும் போது, தி.மு.க. உறுப்பினர்களின் வார்டு பகுதிகளில் செயல்படுத்தும் திட்டப்பணிகளை அ.தி.மு.க.வார்டு உறுப்பினர் பகுதிகளிலும் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    எனது வார்டு பகுதியில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.ஆனால் தற்போது மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. 

    இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே மக்களின் குடிநீர் தேவையை தீர்த்து வைக்கும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் எ.வ.வேலு, தெரிவித்தது போல அனைத்து வார்டுபகுதிகளிலும் சமமாக திட்ட பணிகளை நிறைவேற்றி நகராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் பயன்பெற செய்ய வேண்டும் என்றார்.

    இந்த கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க. வார்டு உறுப்பினர்கள், சுயேச்சை உறுப்பினர் ஸ்ரீதேவி பழனி உள்பட அனைத்து வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×