search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    FILE PHOTO
    X
    FILE PHOTO

    வாகனம் மோதி மாணவர்கள் காயம்

    வாகனம் மோதியதில் மாணவர்கள் காயமடைந்தனர்.
    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி- காரைக்குடி சாலையில் தனியார் பள்ளி உள்ளது. இதில் முகமது ஆதீன் (வயது 13), முகமது பரீத் (13) ஆகிய மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று மாலை வழக்கம்போல் பள்ளி முடிந்து  இரண்டு மாணவர்களும் தங்களது மிதிவண்டியில் சென்றுள்ளனர். அப்போது அவ்வழியாக குடிதண்ணீர் வினியோகம் செய்யும் வாகனம் மாணவர்கள் மீது மோதியது.

    இதில் மாணவர் முகமது ஆதினுக்கு காலில் பலத்த அடி ஏற்பட்டு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் இரண்டு மாணவர்களையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாஙகி அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

    சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×