என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது
திருமண ஆசை காட்டி பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர்
காரைக்கால் திருநள்ளாறில் திருமண ஆசை காட்டி பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால்:
காரைக்கால் திருநள்ளாறை அருகே சேத்தூர், பண்டாரவாடை கிராமத்தை சேர்ந்தவர் தீபா(வயது29). இவர் மயிலாடுதுறை பகுதி காவேரி நகரை சேர்ந்த யபேஷ்(30) என்பரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததார்.
இந்நிலையில், யபேஷ் தீபாவை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பலமுறை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, யபேஷ் தீபாவை திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார். இதனால் கோபம் அடைந்த தீபா யபேஷிடம் இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை வெளியிடுவேன் என கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.
ஆத்திரமடைந்த யபேஷ் தீபாவை கொலை செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தீபா காரைக்கால் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பரில் வழக்கு பதிவு செய்த போலீசார், யபேஷை கைது செய்தனர். மேலும் யபேஷ் சகோதிரி ஜபசீலி (37), ஜபசீலி கணவர் இன்பராஜ் (39) ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காரைக்கால் திருநள்ளாறை அருகே சேத்தூர், பண்டாரவாடை கிராமத்தை சேர்ந்தவர் தீபா(வயது29). இவர் மயிலாடுதுறை பகுதி காவேரி நகரை சேர்ந்த யபேஷ்(30) என்பரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததார்.
இந்நிலையில், யபேஷ் தீபாவை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பலமுறை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, யபேஷ் தீபாவை திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார். இதனால் கோபம் அடைந்த தீபா யபேஷிடம் இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை வெளியிடுவேன் என கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.
ஆத்திரமடைந்த யபேஷ் தீபாவை கொலை செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தீபா காரைக்கால் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பரில் வழக்கு பதிவு செய்த போலீசார், யபேஷை கைது செய்தனர். மேலும் யபேஷ் சகோதிரி ஜபசீலி (37), ஜபசீலி கணவர் இன்பராஜ் (39) ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






