என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆழ்குழாய் கிணறு
ஆழ்துளை கிணற்றுக்கு மின்மோட்டார் அமைக்ககோரி பொது மக்கள் மனு
திருவரங்குளம் பகுதியில் ஆழ்துளை கிணற்றுக்கு மின்மோட்டார் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழகரும்பிரான்கோட்டை ஊராட்சியைச் சேர்ந்த ஆதிதிராவிடர் காலனி மக்களுக்கு குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது. ஆனால் அதில் மின் மோட்டாரை பொருத்தி பொது மக்களின் பயன் பாட்டிற்கு கொண்டு வரவில்லை.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அப்பகுதியில் தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். பொதுமக்கள் திருவரங்குளம் ஒன்றிய ஆணையரிடம் ஆழ்துளை குழாய்க்கு மின்மோட்டார் அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பலமுறை மனு அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரிடம் ஆழ்துளை கிணறுக்கு மோட்டார் பம்ப்செட் அமைத்து அருகிலுள்ள நீர்த்தேக்கத் தொட்டியில் குடிநீர் ஏற்றி பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழகரும்பிரான்கோட்டை ஊராட்சியைச் சேர்ந்த ஆதிதிராவிடர் காலனி மக்களுக்கு குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது. ஆனால் அதில் மின் மோட்டாரை பொருத்தி பொது மக்களின் பயன் பாட்டிற்கு கொண்டு வரவில்லை.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அப்பகுதியில் தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். பொதுமக்கள் திருவரங்குளம் ஒன்றிய ஆணையரிடம் ஆழ்துளை குழாய்க்கு மின்மோட்டார் அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பலமுறை மனு அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரிடம் ஆழ்துளை கிணறுக்கு மோட்டார் பம்ப்செட் அமைத்து அருகிலுள்ள நீர்த்தேக்கத் தொட்டியில் குடிநீர் ஏற்றி பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.
Next Story






