என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    1500 மதுபாட்டில்கள் அழிப்பு
    X
    1500 மதுபாட்டில்கள் அழிப்பு

    உளுந்தூர்பேட்டையில் 1500 மதுபாட்டில்கள் அழிப்பு

    கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் போலீசார் பறிமுதல் செய்த மது பாட்டில்களை நீதிமன்ற உத்தரவுபடி அழித்தது இதுவே முதல் முறையாகும்.
    உளுந்தூர்பேட்டை:

    உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமல் பிரிவு சார்பில் கடந்த 2 வருடங்களாக போலீசார் சோதனையின்போது பிடிபட்ட 1500 மது பாட்டில்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் மற்றும் அதிகாரிகள் 1500 மதுபாட்டில்களை உளுந்தூர்பேட்டை ஏரிக்கரையில் கொட்டி ஜே.சி.பி. எந்திரத்தின் மூலம் அதனை அழித்தனர்.

    கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் போலீசார் பறிமுதல் செய்த மது பாட்டில்களை நீதிமன்ற உத்தரவுபடி அழித்தது இதுவே முதல் முறையாகும்.
    Next Story
    ×