என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    காரைக்கால் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

    காரைக்கால் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்கால்:

    காரைக்கால் அருகே உள்ள கோட்டுச்சேரி போலீஸ் சரகத்திற்குட்பட்ட ராயன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குமார்(வயது53). இவரது மகன் முரளிதரன்(19).

    இவர் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு முரளிதரன் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியதால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அவருக்கு நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்துள்ளார். மேலும் முரளிதரன் கடந்த நாட்களாக வீட்டில் உள்ளவர்களிடம் சண்டை போட்டு வந்துள்ளார்.

    சம்பவத்தன்று முரளிதரன் உள்ளிட்ட வீட்டில் அனைவரும் இரவு வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். தொடர்ந்து காலையில் முரளிதரனின் தாய் கலைச்செல்வி எழுந்து பார்த்தபோது முரளிதரன் படுக்கையில் இல்லை. இதற்கிடையே முரளிதரன் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் சேலையில் தூக்குப்போட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தொங்கி கொண்டு இருந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோட்டுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டுசென்றனர்.

    தொடர்ந்து முரளிதரன் மேல் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு முரளிதரனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து குமார் கோட்டுச்சேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×