என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
குருபரப்பள்ளி அருகே மதுபோதையில் ஓட்டலில் தகராறு-வாலிபர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே மதுபோதையில் ஓட்டலில் தகராறு செய்த பெங்களூரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அடுத்துள்ள போலுபள்ளி பகுதியை சேர்ந்தவர் முனிராஜ் (வயது41). இவர் அங்குள்ள ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வரு கிறார்.
இந்த நிலையில் நேற்று மதுபோதையில் ஓட்டலில் ஒருவர் தகராறு செய்தார். இதனால் தடுக்க சென்றவர்களை ஆபா சமாக திட்டியுள்ளார்.
இது குறித்து முனிராஜ் குருபரப்பள்ளி போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஓட்டலில் தகராறு செய்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் பெங்களூருவை சேர்ந்த சந்திரசேனன் (வயது31) என்று தெரியவந்தது. உடனே அவரை கைது செய்தனர்.
Next Story






