என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    தொழிலாளி அடித்துக் கொலை - 5 பேர் கைது

    மயிலாடுதுறை அருகே தொழிலாளியை அடித்துக் கொலை செய்த வழக்கில் 3 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோவில் அருகே கிள்ளியூர் கிராமம், ராமன் கோட்டம் காலனி தெருவைச் சேர்ந்தவர் சித்திரன் (வயது 70). இவருடைய மகன் பிரகாஷ். திருக்கடையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். மகன் பள்ளிக்கு செல்லாததை கண்டித்துள்ளார்.

    ஆனால் அதே தெருவை சேர்ந்த பிச்சைகண்ணு (60), பாலமுருகன் (35), காளியம்மாள் (32), பிரியா (30), ஜெயலட்சுமி, ஆகியோர் தங்களை திட்டுவதாக நினைத்து சித்திரனை தாக்கியதில் அவர் இறந்தார்.

    தகவலறிந்த செம்பனார்கோவில் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலான போலீசார் சென்று இறந்த சித்திரன் உடலை கைபற்றி மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து 5 நபர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
    Next Story
    ×